வெற்றியை சுவீகரித்தது CSK : 5விக்கெட்டுகளில் லக்னோவை வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ்- லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 167 வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள்…

Read More

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இலங்கையில் 2 கோடி வசூல் சாதனை

அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இலங்கையில் முதல் நான்கு நாட்களில் 2 கோடி இலங்கை ரூபாய் (LKR) வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவல் இலங்கையின் உள்ளூர் திரையரங்கு வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட மதிப்பீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் (ஏப்ரல் 10): இலங்கையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படம் 80% ஆக்கிரமிப்புடன் தொடங்கியது. முதல் நாள் வசூல் சுமார் 60-70…

Read More

இலங்கை கடவுச்சீட்டின் மதிப்பு அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை கடவுச்சீட்டுக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு தற்போது தரவரிசையில் 43.5 மொத்த மதிப்பெண்களுடன் 168ஆவது இடத்தில் உள்ளது. குறித்த அமைப்பு 199 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை 171ஆவது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறி 168ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கடவுச்சீட்டுகளின் வலிமையை அறிவிக்க Nomad Capitalist 5…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம்

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 டிசம்பர் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட எப்.பி.ஐ. அறிக்கையில், 2019 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையில், தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள்…

Read More

2026 தேர்தலில் வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே – விஜய் சூளுரை

‘மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி 2026 தேர்தலில் வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.” என அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.” என…

Read More

சஜித்தை டெல்லிக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள்…

Read More

ஹெலிக்கொப்டர் விபத்து ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 உற்பட 6பேர் மரணம்.

அமெரிக்காவின் நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே இந்த விபத்தில் சிக்குண்டுள்ளனர். ஸ்பெயினை சேர்ந்த ஐவர் உட்பட ஆறு பேர் பயணித்த ஹெலிக்கொப்டர் தலைகீழாக ஆற்றிற்குள் விழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு படகுகளை அனுப்பியதாக தீயணைப்பு பிரிவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நீச்சல்…

Read More

சீனப் பொருட்களுக்கு 145% வரி – அமெரிக்கா விளக்கம்

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி விகிதம் 145% என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (9) விதித்த 125% வரி குறித்து ​​விசேட விளக்கத்தை அளிக்கும் போதே இந்த தகவல் வௌியிடப்பட்டுள்ளது. சீனப் பொருட்களுக்கு முன்னர் இருந்த 20% வரி விகிதம் உள்ளீர்க்கப்படாமலேயே வரி குறித்து நேற்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, சீனாப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விகிதம் 145%…

Read More

தனியார் ஹெலிகாப்டர் விபத்து.. 06 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற போது நியூயார்க் ஹட்சன் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது. லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

Read More

விடுதியின் மேற்கூரை இடிந்த விபத்து .. அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது. இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென கேளிக்கை விடுதியின்…

Read More