ஆமர் வீதியில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடை வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

கொழும்பில் வொக்ஷால் வீதியில் தீ விபத்து

கொழும்பில் வொக்ஷால் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க 06 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மின் கசிவுவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Read More

விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரை மீட்க நடவடிக்கை

மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டரை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த ஹெலிகொப்டர் நேற்றைய தினம் அவசரமாக தரையிறங்கும்போது மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்தது. இந்த விபத்தில் விமானப்படை ஹெலிகொப்டர் வீரர்கள் இருவரும், இராணுவ விசேடப் படை வீரர்கள் நால்வரும் உயிரிழந்தனர். விபத்து நடந்த நேரத்தில், ஹெலிகொப்டரில் 12 இராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், ஏனைய 6 இராணுவ வீரர்களும் சிகிச்சைகளுக்காக அரலங்காவில மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது….

Read More

போதைப்பொருளை பயன்படுத்திய சாரதி கைது

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்றவகையில் செலுத்தியமை தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை பகுதியில் வைத்து களுத்துறை தெற்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த சாரதி, சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது அவர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

உயிரிழந்த மாணவி, ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபலமான பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் கணித பாட ஆண் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா…

Read More

அரசு ஊழியர்களுக்கான கடன்கள் தொடர்பான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை 2025.05.01 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதில், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு…

Read More

7 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம் – ஆரம்பமாகும் விசாரணை

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (மே 09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர் இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். பசறை, உடகம பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு…

Read More

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தினை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று (10) முதல் ஆரம்பமாகி, வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு இணையாக, அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இன்று முதல் தொடங்கவுள்ளது. இலங்கை முழுவதற்குமான சாசன பாதுகாப்பு மன்றம், ஜனாதிபதி அலுவலகம், பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகார திணைக்களம், மத்திய மாகாண சபை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து…

Read More

Sarvodaya Development Finance PLC Joins Global Banking Alliance (GABV), set to host Annual Board Meeting in Sri Lanka

Remarking a new milestone in its pledged journey towards sustainable financing and inclusive financing, Sarvodaya Development Finance PLC (SDF) has secured the full membership in the Global Alliance for Banking on Values (GABV), an international network of banks working to build a more sustainable and inclusive financial system. Through this membership, Sarvodaya Development Finance PLC…

Read More