அநுராதபுரத்திற்கு விஜயம் செய்யும் இந்திய பிரமர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 8.30 முதல் 11 மணி வரை அநுராதபுர நகர், ஜய ஸ்ரீ மகா போதி மற்றும் தொடருந்து நிலையத்தை அண்மித்த பிரதான…

Read More

திருகோணமலையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது !

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று (ஏப்ரல் 04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, கைதானவர்…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது.

துபாயில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் குறித்த பெண் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண்ணின் பயணப் பொதியிலிருந்து 10,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 50 சிகரட்டு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர், பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர்…

Read More

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (ஏப்ரல் 05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்பதனை இந்திய பிரதமர் மோடியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த இலங்கை அணிவீரர்களை சந்தித்தார் மோடி

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 05) மாலை சந்தித்தார். 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை சூடிய அணி வீரர்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், ருமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, ரவீந்திர புஷ்பகுமார, மார்வன் அத்தபத்து, உபுல் சந்தன ஆகிய வீரர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read More

100 வயதில் தாயான கலபகோஸ் ஆமைகள்

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் உள்ள 150 ஆண்டு பழமையான உயிரியல் பூங்காவில், அழிந்துவரும் நிலையில் உயிரினங்கள் பட்டியலில் உள்ள மேற்கு சாண்டா க்ரூஸ் கலபகோஸ் ஆமைகள் முதன்முறையாக குஞ்சு பொறித்துள்ளன. நூறு வயதான பெற்றோருக்கு பிறந்த குஞ்சுகளுக்கு கீரை உணவுகளைக் கொடுத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உயிரியல் பூங்காவுக்கு தாய் ஆமை வந்ததன் 93-ஆவது ஆண்டு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி, பொதுமக்கள் பார்வைக்கு குஞ்சுகள் வைக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

3 வயது சிறுமிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார். தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு பழமையான கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், “நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய…

Read More

பாதுகாப்பு , சுகாதாரம் உட்பட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கை இந்தியா இடையே பரிமாற்றம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று (ஏப்ரல் 05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன. அவையாவன – 01- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான…

Read More

கிரீன்லாந்தை உரிமைகோரும் டிரம்ப் – வெடித்த போராட்டங்கள்

டென்மார்க் நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதை கிரீன்லாந்து மக்கள் விரும்பமாட்டார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இயற்கை வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக டிரம்ப் கூறிவருகிறார். டிரம்புக்கு, கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அங்கு வசிக்கும் மக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில், டென்மார்க் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா என்பதை கிரீன்லாந்து மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்க…

Read More

ட்ரம்ப்பின் அறிவிப்பால் ஆட்டம் கண்ட அமெரிக்க பில்லியனர்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி பதிலடிகளால் அந்நாட்டின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள முதல் 500 பேர் மட்டும், ஒரே நாளில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். மார்க் ஜுக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் முதற்கொண்டு கிட்டத்தட்ட அமெரிக்காவின் முதல் 500 பெரும் பணக்காரர்கள் 17 லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் அளவு நஷ்டத்தை ஒரே நாளில் சந்தித்துள்ளனர். பல நாடுகளுக்கும் பதிலடி வரிகளை தீட்டிவிட்டு, தனது மார் அ லகோ ரிசார்ட்டுக்கு கோல்ஃப் விளையாட்டைக்…

Read More