வெனிசுலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) நியமிக்கப்பட்டதை ரஷ்யா வரவேற்றுள்ளது.  இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “நவீன காலனித்துவ அச்சுறுத்தல்களை” கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. வெனிசுலா தனது எதிர்காலத்தை வெளிநாட்டுக் குறுக்கீடு இன்றித் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்றும் மாஸ்கோ உறுதி அளித்துள்ளது.

Read More

50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் விபத்து!

காத்மாண்டுவில் இருந்து சுமார் 50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் ஒன்று நேபாளத்தின் பத்ராபூர் விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (02) இரவு 9 மணியளவில் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஓடுபாதையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வழுக்கிச் சென்று, அங்கிருந்த…

Read More

கடல் சீற்றம் அதிகரிப்பு – திருகோணமலை

திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள்.  திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தியும் வருகின்றார்கள்.  தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் கடல்…

Read More

கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது

ஜனவரி 1 அன்று கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 22 பேர், பிரான்ஸ் (8), இத்தாலி (6) உட்படப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து முதன்முறையாகப் பேசிய ‘Le Constellation’ பாரின் உரிமையாளர்கள், இது ஒரு பயங்கரமான துயரம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர். 2020 முதல் 2025 வரை அந்த பாரில் முறையான பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படவில்லை…

Read More

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னார் பெண் கோரிக்கை

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார்.  இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த…

Read More

இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் – ட்ரம்ப்

வாஷிங்டனில் குடியரசுக் கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவது மிக அவசியம் என்று வலியுறுத்தினார். “நாம் வெற்றி பெறாவிட்டால், ஜனநாயகக் கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து என்னைப் பதவி நீக்கம் (Impeachment) செய்ய முயல்வார்கள்” என்று அவர் எச்சரித்தார். வரலாற்று ரீதியாக, ஆட்சியில் இருக்கும் கட்சி இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் வழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வு…

Read More

திரிபோஷா திட்டத்தை வலுப்படுத்த அமைச்சரவை அனுமதி

எமது நாட்டின் தேசிய போசாக்குப் பற்றிய பங்களிப்புக்களின் ஒரு பகுதியாக திரிபோசா வேலைத்திட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கு உலக உணவுத் திட்டம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.  அதற்கமைய, திரிபோசா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் தரப்பண்பை அதிகரிப்பதற்கும், மற்றும் திரிபோசா விநியோகத்தை பலப்படுத்தும் நோக்கிலும் ‘இலங்கையில் மேம்படுத்தப்பட்ட திரிபோசா வேலைத்திட்டத்திற்கான தாங்குதிறன் கொண்ட தரப்பண்புடன் கூடிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உணவு முறைமையைக் கட்டியெழுப்பல்: பயிரிடுவோம் கட்டியெழுப்புவோம்’ எனும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் கருத்திட்ட முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது….

Read More

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

இலங்கை பல்கலைக்கழகங்களை உலகளாவிய தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய தரமுயர்த்துவதற்கும், சர்வதேசமயப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானதென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும்; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்தாண்டு காலப்பகுதிக்கு கீழ்வரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது 

Read More

குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது.  அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ்…

Read More

 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனன் (Lauterbrunnen) பகுதியில் உள்ள கிம்மல்வால்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேஸ் ஜம்பிங் (Base jumping) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தனது நண்பருடன் இணைந்து ‘நேபாளப் பாலத்தில்’ இருந்து குதித்தபோது, எதிர்பாராதவிதமாக மலையின் தரைப்பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இவ்விபத்து குறித்து சுவிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More