டித்வா தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில்  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கவுள்ள விசேட செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு  எதிர்க்கட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கோரிக்கை  விடுத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து  குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட  டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா அல்லது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா என தேடிப் பார்த்து அறிக்கை …

Read More

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

பொலன்னறுவை, வெலிகந்த, ரணவிரு கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (4) மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள்…

Read More

நோயாளிகள் சிகிச்சைகளை பெறும் நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார துணை அமைச்சர் ஆய்வு விஐயம்!

சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு விசேட ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.  சுகாதார அமைச்சினால் ஆரமபிக்கப்பட்ட  விசேட திட்டத்தின் கீழ், வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதன் மூலம், அரசாங்க வைத்தியசாலைகளை உரிய முறையில் பராமரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இந்த விசேட ஆய்வு விஜயத்தை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேற்கொண்டார்.  இங்கு, வைத்தியசாலையின் வார்டுகள்,…

Read More

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சிக்கவில்லை – என்.எம்.ஆலம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த இலங்கை அரசு, குறிப்பாக இலங்கை கடற்படை  தொடர்ந்து துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றபோதும், இந்திய அரசு தமது மீனவர்களை எல்லை தாண்டாதிருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள இவ்விணைய சேவை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (5) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய மீனவர் விடயங்கள் தொடர்பாகவும்  அவர்களின்…

Read More

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 941 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (4) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 952 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 397 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 566 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 31  கிலோ  776 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 156311 கஞ்சா செடிகளும், 001 கிராம் குஸ் போதைப்பொருளும்,…

Read More

அரச வைத்தியசாலையில் முதல் முறையாக “உணவு பிரிவு” ஆரம்பிக்க நடவடிக்கை!

அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. மேலும் அதன் முன்னோடி திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (06) மஹரகம வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கபட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்,…

Read More

தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். மேலும் அவர், இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, தென் மாகாணங்கள் கன மழையைப்…

Read More

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் 793 பேருக்கு டெங்கு!

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் மாத்திரம் சுமார் 793 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு சுமார் 51,438 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளிக்குப் பின்னர், இதுவரை…

Read More

பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு இடையில் தகராறு ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு தரப்பு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி வரும் நிலையில் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து சில நாட்களாக பல்கலைக்கழக விடுதியில் பட்டாசு வெடித்து விளையாடியுள்ளனர்.  இதனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு…

Read More

From Colombo to London: Craft, Climate, and Creative Economy Converge in a Global Milestone for Sri Lanka

The Sri Lanka High Commission in London recently marked a defining milestone in creative economy and craft development through the global launch of the EU–Sri Lanka Craft Matchmaking Programme, bringing the initiative’s research, collaborations, and co-created outcomes onto the international stage for the first time. The milestone comes at a critical moment for Sri Lanka,…

Read More