நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு மின் உற்பத்தி இயந்திரம் கடந்த நவம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ளது. அதேநேரம், மற்றைய மின் உற்பத்தி இயந்திரம் அதன் கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இந்த இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது

Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 600க்கும் அதிகமானோர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 30,134 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 294 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 196 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

யாழ். நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!

நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் 2025

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “வாகனப் பரிசோதனை உயிர்களைக் காக்கும்” (Vehicle Testing Can Save Lives) என்ற விசேட விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிலோன் வாகனச் சங்கம் (AA Ceylon) ஆரம்பித்துள்ளது. சர்வதேச வாகனச் சம்மேளனம் (FIA) மற்றும் ஐக்கிய நாடுகளின் ‘வீதிப் பாதுகாப்புக்கான தசாப்த கால நடவடிக்கை’ (Decade of Action for Road Safety) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள்…

Read More

காலி மாநகர சபையில் குழப்பநிலை!

காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. காலி மாநகர சபையின் மேயர் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தை  ஆரம்பிக்க முயன்ற போது அங்கிருந்த காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர்  “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர்.  ஆனாலும் காலி மாநகர சபையின் மேயர் விசேட கூட்டத்தை ஆரம்பித்துள்ள…

Read More

Seylan Islamic Banking Extends Support to OrphanCare Trust to Empower Orphans Beyond Institutional Care

29 December 2025, Colombo: Seylan Bank’s Islamic Banking Unit recently extended its support to OrphanCare Trust, contributing LKR 1 million from its charity fund to strengthen the organization’s ongoing efforts in supporting orphaned youth as they transition into independent life. The donation was handed over at a simple ceremony attended by senior representatives of Seylan…

Read More

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன….

Read More

First Capital Asset Management becomes Sri Lanka’s First corporate signatory to the UN-supported principles for responsible investment

JXG (Janashakthi Group) subsidiary First Capital Holdings PLC announces that its sub-subsidiary, First Capital Asset Management Limited, a leading player in Sri Lanka’s asset management industry, has become the first corporate in the country to sign on to the United Nations-supported Principles for Responsible Investment (PRI). This milestone highlights the group’s commitment to responsible and…

Read More

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை 2025 ஜனவரி-நவம்பர்மாத காலப்பகுதியில் 5.42% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: நவம்பரில் சிறிய சரிவு

ஒன்றிணைந்த ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் இலங்கையின் ஆடைத் துறை ஒரு வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, இக்காலப்பகுதியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 4,571.99 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.42% அதிகரிப்பாகும். 2025 நவம்பர் மாதத்தில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானம் 367.60 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின்…

Read More

துபாயை தளமாகக் கொண்ட ‘Navire Logistics’ இல் முதலீடு செய்வதன் மூலம் தனது உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் டேவிட் குழுமம்

துபாய் மற்றும் ஓமானைத் தளமாக கொண்ட புகழ்பெற்ற லொஜிஸ்டிக் (Logistics) நிறுவனமான Navire Logistics Services L.L.C நிறுவனத்தின் 50% உரிமையைக் கையகப்படுத்தியதன் மூலம் டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) தனது சர்வதேச இருப்பைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, இலங்கைக்கு அப்பால் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும், சர்வதேச சந்தைகளில் தன்னை நிலைநிறுத்துவதற்கும் குழுமம் எடுத்துள்ள ஒரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கையில், இக்குழுமத்தின் லொஜிஸ்டிக் பிரிவான D P Logistics (Private)…

Read More