சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள்…

Read More

ஆசியாவில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியல் – இலங்கை 5-ஆம் இடத்தில்

2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியலில், இலங்கை 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல ஊடக நிறுவனமான அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கை இதனை வெளியிட்டுள்ளது. மவுண்ட் ஃபூஜி, டோக்கியோ, பலாவான், சியோல் போன்ற உலகப் புகழ்பெற்ற இடங்களுடன் இலங்கை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 1-ஆம் இடம் – ஜப்பானின் மவுண்ட் ஃபூஜி, 2-ஆம் இடம் – டோக்கியோ, 3-ஆம் இடம் – பிலிப்பைன்ஸின் பலாவான், 4-ஆம்…

Read More

யாழில் கடற்தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு  – நாகர்கோவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாளையடி, நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்களுக்கும் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.  இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், தங்களுக்கு…

Read More

அவசரகால நிலை நீடிப்பு..! வர்த்தமானி வெளியீடு.

நாட்டில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   இலங்கையில் பொது அவசரநிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் இந்த பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

தைவான் ஆயுத விற்பனை: அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு

தைவானுக்கு ஆயுதங்கள் விற்றதற்காக அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் 10 முக்கிய நபர்களுக்கும் சீனா தடை விதித்துள்ளது.  போயிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சீனாவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டு, சீன நிறுவனங்களுடன் வணிகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்த 11.1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தமே இதற்குக் காரணம். தைவான் விவகாரம் சீனாவின் முக்கிய நலன் என பெய்ஜிங் எச்சரித்துள்ளது.

Read More

மலேசியாவிலும் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…

முழுநேர அரசியலில் களத்தில் இறங்கப்போகும் TVK கட்சித் தலைவர் விஜய், தனது திரையுலக வாழ்க்கையின் இறுதி திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை முடிந்தவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். நடிகர் தளபதி விஜயின் இறுதி திரைப்படமான “ஜனநாயகன்” வரும் ஜனவரி 14ம் திகதி உலகெங்கும் வெளியிடப்படவுள்ள நிலையில். பாதுகாப்பு நிமித்தம் காரணமாக மலேசியாவில் அந்த திரைப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. “ONE LAST TIME” என்று அண்மைக்காலமாக தளபதியின் ரசிகர்கள் விஜயின் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடிதீர்த்துவரும் நிலையில், யாரும்…

Read More

சிறந்த நிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை (Best Corporate Citizen Sustainability) விருதுகளில் DPMC இன் ‘e-Drive’ திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது (Best Corporate Citizen Sustainability Awards) விழாவில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) அதன்  ‘e-Drive’ முன்னணித் திட்டத்திற்கு ‘சிறந்த நிலைபேற்றுத்தன்மை திட்டத்திற்கான’ மெரிட் (Merit) விருதை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, இலங்கையில் நிலைபேறான மற்றும் புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகளில் DPMC நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகிறது. சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது என்பது சூழல் பாதுகாப்பு,…

Read More

‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்ட மாபெரும் பரிசான TOYOTA WiGO வெற்றியாளரை அறிவித்த தீவா

20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் மிகவும் நம்பகமான சலவைத் தூள் வர்த்தகநாமங்களில் ஒன்றான தீவா (Diva), தனது ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மாபெரும் பரிசான புதிய TOYOTA WiGO காரினை, பொலன்னறுவையைச் சேர்ந்த யு.பி. சமன் உதய குமாரா பெற்றுக் கொண்டார். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் இறுதிப் பரிசுக்குலுக்கல் 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்றதோடு, 2025 நவம்பர் 07ஆம் திகதி வத்தளையில்…

Read More

1MDB ஊழல் வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி எனத் தீர்ப்பு

மலேசியாவின் 1MDB நிதி மோசடி தொடர்பான மிகப்பெரிய வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி செய்ததாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சுமார் 4.5 பில்லியன் டாலர் ஊழல் செய்யப்பட்ட இந்த நிதியிலிருந்து, ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நஜிப்பின் கணக்குகளுக்குச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் அவருக்கு, இந்த புதிய தீர்ப்பின் மூலம் மேலும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்….

Read More

தெற்கு சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பாதிப்பு தீவிரம்

சுவிட்சர்லாந்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தெற்குப் பகுதியில் உள்ள டிசினோ (Ticino) மண்டலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த வார புள்ளிவிவரங்களின்படி, 100,000 குடியிருப்பாளர்களுக்கு சுமார் 66 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் இந்த விடுமுறை காலத்தில் காய்ச்சலால் அவதியுற்று வருகின்றனர். கடந்த ஆண்டை விட தற்போது பாதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. காய்ச்சலுடன் சேர்த்து கொரோனா மற்றும் ஆர்.எஸ்.வி (RSV) வைரஸ்களும்…

Read More