கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முகமது!
நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகமது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் முடிவின்படியும், கட்சித் தலைமைக்கு துரோகம் இழைக்காமல் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்மாயில் முத்து முகமது, தேசியப் பட்டியல் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.