இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
அனுபவம் மிக்க தலைவர் விஷ் கோவிந்தசாமிக்குப் பிறகு, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிறைவேற்று அதிகார பதவியில் இருந்த விஷ் கோவிந்தசாமி அவர்கள் அப்பதவியிலிருந்து விலகி, பிரதித் தலைவராக நிறைவேற்று அதிகாரமில்லாத பதவியை வகிப்பதாக நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. குழுமத்தில் அவர் வகித்த சிறந்த தலைமை, புத்தாக்கமான மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் பொறுப்பான தொழில் முனைவோருக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது 28 ஆண்டு வணிக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனைகளாக உள்ளன. கோவிந்தசாமி அவர்கள் தொடர்ந்து குழுமத்தின் ஆலோசகராகப் பணியாற்றுவார். கோவிந்தசாமி அவர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வாகவும்,…

