தாய்லாந்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தீவிர அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 33,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு இரட்டிப்பாகியுள்ளது. தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் குறைந்தது 6,000 கொவிட்-19 சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகும்.

ஆண்டுதோறும் நிகழும் மொத்த இறப்புகளில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் மொத்த இறப்புகளில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதாரத் தரவுகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வயது வந்தோரில் 20 வீதமானோர் உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறியாமல் ஆண்டுதோறும் அண்ணளவாக 60,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 4,000 பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர் அல்லது அங்கவீனமடைகிறார்கள் என்று…