இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…

பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்களை நிச்சயம் தண்டிக்குமாறு இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்து!
1977 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியே பட்டலந்த வதைக்கூடத்தின் சூத்திரதாரிகள் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நல்ல…