மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

மார்ச் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை
மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மட்டும் சுமார் ஒரு லட்சம் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் திகதி மார்ச் முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97 ஆயிரத்து 322 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மார்ச் மாதத்திற்குள் மட்டும் 14,848 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதே நேரம் இந்த ஆண்டின்…