நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம அலுவலர்கள்
கிராம சேவையாளர்கள் இன்று (மார்ச் 14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாக இலங்கை கிராம சேவையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்.

