இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 12 பேர் உயிரிழப்பு.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.