அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

தேநீர் தானம் மூலம் சிவனொளிபாதமலைக்கு மிதமான வெப்பத்தை கொண்டுவரும் கொட்டகல கஹட்ட.
இலங்கை, கொழும்பு, 2025 பெப்ரவரி 21: உயர் ரக இலங்கை தேயிலைக்கு பெயர் பெற்ற கொட்டகல கஹட்ட, இவ்வருட யாத்திரை பருவ காலத்தில் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், புனித சிவனொளிபாதமலையில் (பாவா ஆதமலையில்) தனது வருடாந்த தேநீர் தானத்தை (தன்சல்) பெருமையுடன் முன்னெடுத்திருந்தது. யாத்திரிக காலம் முழுவதும் வார இறுதி நாட்களில் இடம்பெறும் இந்த நிகழ்வானது, புகழ்பெற்ற மலை உச்சிக்கு சவாலான பயணத்தை மேற்கொண்ட அனைவருக்கும் கருப்பட்டியுடன் கொட்டகல கஹட்ட மிதமான தேநீரை…