நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் கைது.
சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய 875 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 704 வீரர்களும், இராணுவத்திலிருந்து தப்பியோடிய இரண்டு அதிகாரிகளும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடற்படையினரிடமிருந்து தப்பிச் சென்று கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் விமானப்படையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறிய 100 பேரும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

