நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Michelin Sri Lanka
சர்வதேச மகளிர் தினத்தில், Michelin Sri Lanka, தனது அமைப்பு முழுவதும் உள்ள பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தி, ஏற்பாடு செய்திருந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் 150 பெண் குழு உறுப்பினர்களை கௌரவித்தது. இலங்கையின் முதலாவது பார்வை திறனற்ற ஆடை வடிவமைப்பாளர் அஷ்சார்யா பீரிஸ் ஜெயக்கொடி மற்றும் நிறுவனத் தலைவர்களின் ஊக்கமளிக்கும் உரைகள், இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளான “பல்வகைத்தன்மைக்கான நடவடிக்கையை விரைவுபடுத்துதல்” என்பதற்கு உயிரூட்டின. பெண்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்…

