வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இது…

தகவல்தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் இலங்கையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் EWIS Colombo Ltd, உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிகணினிகளை சிம்பாவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது .
கொழும்பு, இலங்கை – இலங்கையின் தகவல் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தித் தொழில்துறையில் புதியதொரு சாதனையைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது மற்றும் ஒரேயொரு கணினி உற்பத்தியாளரான EWIS Colombo Ltd நிறுவனம், உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மடிக்கணினிகளின் முதற்தொகுதியை சிம்பாவே நாட்டிற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை நிகழ்வானது, சர்வதேச தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியில் வளர்ந்துவரும் சக்தியாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளமை மாத்திரமன்றி, சர்வதேச அரங்கில் புத்தாக்கம், தரம் மற்றும் மேன்மை…