நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2025 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறந்த சுகாதாரத்துறைச் செயற்பாடுகளால் 45.2 பில்லியன் வருவாயை ஈட்டிய சன்ஷைன்ஹோல்டிங்ஸ்.
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN), டிசம்பர் 31, 2024 இல் (9MFY25) முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஒருங்கிணைந்த வருவாயாக 45.2 பில்லியன் ரூபாவை பதிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது, இது முன்னைய ஆண்டை விட 6.7% அதிகரிப்பாகும். மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் மொத்த இலாப விகிதம் 30.8% ஆக அமைந்திருந்தது, இது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 31.3% ஆக இருந்ததை விட குறைவாக உள்ளது, இது முக்கிய செயல்பாடுகளின் மீள்தன்மையை பிரதிபலிக்கிறது. நிகர இலாபம்…

