நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாணவர்களுக்கு 2028-ல் அறிமுகமாகவுள்ள புதிய பரீட்சை.
மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதமான பரீட்சை ஒன்றை 2028ம் ஆண்டு நடத்த உள்ளதாக நாடளுமன்றத்தின் இன்றைய(மார்ச் 10) அமர்வின் போது பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதத்திலான பரீட்சை ஒன்றை 2028ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பிலும் தெளிவூட்டினார், புலமைப்பரிசில் பரீட்சை மூலம் ஏற்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் எனவும்…

