கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Read More

உரமானியம் கிடைக்காததால் வேதனையில் விவசாயிகள்

சிறுபோகத்திற்கான விளைச்சல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் உரமானியம் இதுவரையிலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சுமத்துகின்றனர். தற்போது சிறுபோக நெற்செய்கைக்காக பதினைந்தாயிரம் மெற்றிக் டன் உரம் தேவைப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. குறித்த உரத்தொகையானது ஒரு மாதத்துக்கு முன்பாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு உரிய காலப்பகுதிக்குள் உரம் வழங்கப்படாமையால் எதிர்பார்த்தளவு விளைச்சலைப் பெற முடியாது எனவும் விவசாய அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. மானிய விலையில் உரம் வழங்கப்படாமையினால் அதிக விலைக்கு உரத்தை…

Read More

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் பொலிஸ் அதிகாரிகள் என்றும், அவர்களில் ஒரு…

Read More

இன்று முதல் தேர்தல் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,…

Read More

24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள்

இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் 3 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த காலப்பகுதியினுள், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

மருத்துவமனையில் குண்டு வெடிப்பு; 7 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பேன்ஹக் நகரில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

Read More

சுற்றுலா வேன் விபத்து – 7 பேர் பலி

அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணம் யல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே நேற்று மாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 14 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது வேன் மோதியது. இந்த கோர விபத்தில் வேன் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு…

Read More

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு அருகில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு தரை மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூ மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read More

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என்றும், காணாமல் போன பெண் 22 வயதுடையவர் என்றும், இருவரும் கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரும் காணாமல் போன பெண்ணும் மற்றொரு குழுவினருடன் கலா ஓயாவில் நீராடிய போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியதாக…

Read More

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட லொக்கு பெட்டி

பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான லொக்கு பெட்டி என அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த நபர் அத்துருகிரிய பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி க்ளப் வசந்த எனப்படும் வர்த்தகர் வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டு, மேலும் பலரைக் காயமடையச் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக அடையாளம்…

Read More