மட்டக்களப்பு கிரானில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு – கிரான், கருங்காளியடி பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டர் குண்டு ஒன்றை கடந்த 12ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாம்; தற்போது காணி உரிமையாளர்களிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மெகா கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டுவருகிறது. குறித்த நடவடிக்கைகளின்போதே, மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

தெருநாய் அதிகரிப்பால் விபத்துகள்

நாட்டில் தெருநாய்கடி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்  தெருநாய்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும்  தேசிய விலங்கு நல நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன்படி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 250,000 க்கும் மேற்பட்ட நாய்கடி சம்பவங்கள் பதிவாகின்றன என தேசிய விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.  இதேவேளை, இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள் இருப்பதாக விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழுவின் மற்றுமொரு உறுப்பினர்  கிஹான் தினுஷ்கா தெரிவித்துள்ளார். …

Read More

வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது (Absenting from the…

Read More

இஸ்ரேலில் இலங்கையர் உயிரிழப்பு

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த மரணம் குறித்து இஸ்ரேல் பொலிஸின் இன்டர்போல் கிளை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கை அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு முகவரகத்தினூடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை – மோரா பகுதியிலுள்ள பெருந்தோட்டப் பயிற்சி நிலையத்தில் செயன்முறைப் பட்டறைக்காக வந்த மாணவர்கள் குழுவே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர் குழுவில் உள்ள 06 மாணவர்கள் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

பதுளை – செங்கலடி வீதியின் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – செங்கலடி வீதியின் மரபாலம் பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாஓயாவிலிருந்து செங்கலடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்துவந்த டிராக்டருடன் மோதியதில், நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.  விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் டிராக்டரின் சாரதி காயமடைந்து கரடியனாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.  இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி;…

Read More

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) நடத்தப்பட்டது.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது. குறித்த நடைபயணத்தில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக லங்கா ரைட் 2025

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்படும் ‘லங்கா ரைட் 2025’ சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 18 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 18ஆம் திகதி லேக் ஹவுஸ் வளாகத்தில் தொடங்கி, பேலியகொடை பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் இப்போட்டியின் முதல் நாளில் 106 கி.மீ. பயணித்து கன்னொருவயை அடைந்து இரண்டாம் நாள் கண்டியில் இருந்து அனுராதபுரம் வரையிலும், மூன்றாம் நாள்…

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! மேலும் இருவர் கைது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டிற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம் குறித்த (13) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும்,…

Read More

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை கண்காணிக்க சென்ற கோட்டை நீதவான்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 9 சந்தேக நபர்களைக் கண்காணிக்க கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே சென்றுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த 9 பேர் குறித்து கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் வழக்கறிஞரையும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சந்தேக நபர்கள் குழுவையும் நீதவான்…

Read More