பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்

Read More

தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் மருத்துவர்கள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நவம்பர் 17 முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது சுகாதார மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தங்கள் பிரச்சினைகள் எதிர்பார்த்தபடி தீர்க்கப்படாததால், இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து…

Read More

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்காக போராடும் விவசாயிகளுக்கு தீர்வு

அடுத்த பருவத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ. 220க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை ரூ. 150க்கும் வாங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போது சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 200 ஆகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ. 300 ஆகவும் அதிகரிக்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிந்து அமைச்சர் இந்த தகவலை…

Read More

பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு..!!

கண்ணியமே முக்கியம்.. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுடனான வர்த்தக வழிதடத்தை முடிந்தவரை புறக்கணித்து பிற நாடுகளிடம் வணிக உறவை அதிகரிக்க ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது….

Read More

இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுரை வழங்கியது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டன் மக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read More
paddy filed agriculture

நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம்!

விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.  விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்குகிறது.  ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600/- தவணை செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு…

Read More

புதிய உள்நாட்டுத் தேனீ கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று சிறிய கொம்புகளைக் கொண்ட புதிய உள்நாட்டுத் தேனீ இனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த புதிய தேனீ இனமானது ஒரு பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்டிருப்பதால், இதற்கு ‘லூசிஃபர்’ (Lucifer) என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்தத் தனித்துவமான ‘கொம்புகள்’ பெண் தேனீக்களுக்கு மட்டுமே காணப்படுகின்றன.  அதேபோல், இந்த தேனீக்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘லூசிஃபர்’ என்ற பெயர், லத்தீன் மொழியில் “ஒளியைத் தாங்கி வருபவர்” என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.  இந்த புதிய தேனீ…

Read More
CUSTOMS

வருமான இலக்கை எட்டிய இலங்கை சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய (11) தினத்துடன் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது  இது குறித்து சுங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 2,115 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக நேற்றைய தினம் வரை 2,117.2 பில்லியன் ரூபாய் என்ற எல்லையை எட்ட முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More
cristiano_ronaldo

இறுதி போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் ரொனால்டோ!!!!

போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரும், உலக கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘Tourise Summit’ மாநாட்டில் இது குறித்துப் பேசிய 40 வயதான ரொனால்டோ, இன்னும் “ஓரிரு ஆண்டுகளில்” கால்பந்தில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டில் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ணம்…

Read More
baby death

பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை!

திருகோணமலை முத்துநகர் பகுதியில் பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இச்சம்பவம் இன்று (11) முத்துநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  சிசு பிறந்து 42 நாட்கள் எனவும் இரவு சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தாய் இன்று அதிகாலை சிசுவை பார்த்த போது உயிரிழந்த நிலையில் குழந்தை இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. 

Read More