தீ அனைப்பு உபகரணங்கள் மேம்படுத்துவதற்காக ஜப்பானின் உதவியின் கீழ் விசேட திட்டம்

இலங்கை முதலீட்டு சபை (BOI)யின் கீழ் செயல்படும் ஏற்றுமதி வலயங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 14 ஏற்றுமதி வலயங்களிள் உள்ள 285 நிறுவனங்களில் சுமார் 145,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த வலயங்களில் தீயணைப்பு திறனை மேம்படுத்துவது ஊழியர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 4,000 லிட்டர் தண்ணீர் தொட்டி கொள்ளளவு…

Read More

மாத்தறை துப்பாக்கிச் சூடு – நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபர்கள்

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று (21) சீராக்கல் மனு ஊடாக மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Read More

விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் விபத்து

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.  கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.  விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 

Read More

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

களுத்துறையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ – பெலவத்த வீதியில் லொறியுடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது களுபோவிட்டிய பகுதியை சேர்ந்த 55 மற்றும் 27 வயதான பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.   அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.   அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.   முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இன்றுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சிலர் கைது

கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கற் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8 வாகனங்களையும் கண்டி தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தற்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Read More

தேபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், நேற்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்திருந்தார்.  அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (20) வரை விளக்கமறியலில்…

Read More

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்.

யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று (மார்ச் 20) மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தேசிய மக்கள் சக்தி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.ரஜீவன் உள்ளிட்ட 17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் வருகைதந்தனர். அத்தோடு,உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும்…

Read More

ஐக்கிய மக்கள் சக்தி வவுனியாவில் வேட்புமனு தாக்கல்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை, தெற்கு தமிழ்பிரதேசசபை, சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் முத்து முகமது தலைமையில் வேட்பாளர்கள் கையளித்திருந்தனர். இதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார் பிரான்ஸ் கூட்டுப் படைத் தளபதி

இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் ஹக்கஸ் லைன் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவைச் சந்தித்துள்ளார். இருவருக்கிடையிலான சந்திப்பில் இந்தியப் பெருங்கடலில் இடம்பெறும் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் அடங்கலாக இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இருவருக்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

Read More