25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார். அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

காற்றின் தரக் குறியீட்டின் சமீபத்திய நிலை

காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் நேற்று (09) காற்றின் தரக் குறியீடு (SL AQI) சற்று மோசமான நிலையில் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் வானிலை நிலையைப் பொறுத்து, இன்றைய காற்றின் தரக் குறியீடு நாள் முழுவதும் 40 முதல் 64 வரை இருக்கலாம் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்திலும், யாழ்ப்பாணம், வவுனியா,…

Read More

பயிர்கள் தொடர்பான தகவல்களை பெற புதிய குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகம்

பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் இந்த தகவல்களை பெறலாம் . இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு…

Read More

இலங்கையில் சூடுபிடித்த பராசக்தி(தீ)

இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி திரைப்படத்தின் காட்சிகளை ரசிகர்கள் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்கள். காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது

Read More

வவுணதீவில் வீட்டில் உறங்கியநிலையில் குழந்தை இறப்பு.

மட்டக்களப்பு- நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து மூன்று மாதமான குழந்தை நேற்று (மார்ச் 9) இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு தாவுடனே உறங்கியுள்ளது. இன்று (மார்ச் 10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய…

Read More

அநாகரிகமாக செயற்பட்ட யூடியூப்பர் உள்ளடங்கலாக நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்.

அண்மையில் யூடியூப்பர் ஒருத்தர் உதவி செய்வதாக கூறி அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப்பர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து அந்த குழு மீண்டும் அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையிலேயே…

Read More

ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நியூஸ்லாந்து அணியை வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸ்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 16 உதிரிகள் அடங்கலாக 251 ஓட்டங்களை பெற்றுகொண்டது. நிஸ்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக தரில் மிட்செல் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்திய அணி…

Read More

இரத்தக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

காலி மாவட்டம், பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொடாமுன பகுதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது, அவர் இடைவழியிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிட்டிகல, கொடாமுன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொடாமுன போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக…

Read More

அச்சுவேலி பிரதே வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்று (மார்ச் 9) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டத்தில் பிரதேச வைத்தியசாலையின் பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், அச்சுவேலி சிற்றூர்தி சங்கத்தினர், சன சமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த செயற்த்திட்டத்தின் போது அச்சுவேலி பிரதேச சபையின் உதவியுடன் பிரதேச வைத்தியசாலையில் உள்ளக வளாகங்களை…

Read More

இலங்கையை வந்தடைந்த பராசக்தி HERO – SK IN SL

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான “பராசக்தி” படம் வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படமாக இருப்பதனால் அதற்க்கேற்ற காட்சிகளை தத்துரூபமாக எடுப்பதற்கு படக்குழு இலங்கை வந்துள்ளது. இந்த திரைப்ப்டுத்திற்க்கான காட்சிகள் இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்படவுள்ளன. இதற்காக “பராசக்தி” குழு 10நாட்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படக்குழுவோடு சிவகார்த்திகேயன் இன்று(மார்ச் 09) இலங்கை வந்து இணைந்துகொண்டார். இந்த படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையில் Iyngaran Media Solution ஏற்பாடுசெய்துள்ளதோடு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க தயாரா உள்ளார்கள்.

Read More