நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிரடி நகர்வு – பாதுகாப்பை அதிகரித்த இஸ்ரேல் – பாதிக்கப்பட்ட ஈரான் அணுசக்தி நிலையங்கள்.
ஈரான் – இஸ்ரேல் மோதலை கண்டித்து பேசிவந்த அமெரிக்காவின் அழைப்புகளை ஈரான் தொடர்ந்து நிராகரித்ததோடு, அமெரிக்காவிற்கு சவால் விட்டதை தொடர்ந்து , அமெரிக்க ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தகர்த்துள்ளது. போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும் “அனைத்து விமானங்களும் இப்போது ஈரானின் வான்வெளிக்கு வெளியே பாதுகாப்பாக திரும்பி உள்ளன. முதன்மை தளமான…

