நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜனசக்தி லைஃப் மத்திய – ஆண்டு விருதுகள் 2025 இல் சிறந்த சாதனையாளர்களை கௌரவித்தது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தனது மத்திய-ஆண்டு விருதுகள் 2025 இல் கிரமமான விற்பனை வகை வியாபாரப் பிரிவில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்வு 2025 செப்டெம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு, ”Jetwing Blue” ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் JXG (ஜனசக்தி குழுமம்) இன் தலைவரும் மற்றும் ஸ்தாபகருமான ஓய்வுப்பெற்ற திரு.சந்திரா ஷாஃப்டர் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், சிறப்பாக…

