பொசொன் தினத்தில் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொசொன் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும்…

Read More

ஜனாதிபதிக்கு வியட்நாமில் சிறப்பு வரவேற்பு

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங்,…

Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி கிடையாது – ஜனாதிபதி

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த…

Read More

அமெரிக்காவுடனான தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றி

இலங்கை மீது அமெரிக்கா விதித்த ‘உயர் தீர்வை வரியை’ திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பலர் எம்மிடம் கேட்கிறார்கள், நீங்கள் திருடாவிட்டாலும் அதனை செய்தவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று. இது குறித்து இன்று காலையும் நான் சட்டமா…

Read More

அமெரிக்கா விதித்த புதிய வரி தொடர்பில் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (ஏப்ரல் 10) அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள புதிய வரி தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More