கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானம் இன்று எட்டப்படும்.
பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (வெப்ரவரி 18) எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கிய நிறுவனங்கள் பேக்கரி பொருட்கள் செய்யும் மாவின் விலையை 10ரூபாயால் குறைத்ததன் பின் இந்த தீர்மானத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது சங்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன கூறினார்.