மட்டக்களப்பு கிரானில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு – கிரான், கருங்காளியடி பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டர் குண்டு ஒன்றை கடந்த 12ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாம்; தற்போது காணி உரிமையாளர்களிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மெகா கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டுவருகிறது. குறித்த நடவடிக்கைகளின்போதே, மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More