சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன….

Read More

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இம்மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான உரிய ஆவணங்களுடன் வருகைதந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Read More