அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோர் 150 பேருடன்2025ஆம் ஆண்டிற்கான கெமி புபுதுவ புத்தாண்டுச் சந்தையை BMICHஇல் நடத்திய HNB
இலங்கையின் கிராமப்புற நுண் நிதித் துறையின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக பாடுபடும் நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB ஆறாவது தடவையாக நடத்தும் “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தை 2025, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதுமுள்ள 150 நுண் நிதி தொழில்முனைவோர், தங்கள் உற்பத்திப் பொருட்களை “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தையில் காட்சிப்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வு…