அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வட பிராந்தியத்தில் டிஜிட்டலை ஊக்குவிக்கும் வகையில் வணிக பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களுடனான நட்புறவை வலுப்படுத்தியுள்ளது
வட பிராந்தியத்தில் உள்ள வணிக பிரமுகர்கள் மத்தியில் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன், அவர்களுடன் பிரத்தியேகமான சந்திப்பொன்றை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி அண்மையில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சந்திப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தில் வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவுவதில் இவ்வங்கி காண்பித்து வரும் அர்ப்பணிப்பில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வாக இம்முயற்சி அமைந்துள்ளது. வட பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட வணிக பிரமுகர்களும், தொழில் முயற்சியாளர்களும் இந்த…