அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…

பிரபல நடிகை “மாலினி பொன்சேகா” வைத்தியசாலையில் அனுமதி.
இலங்கை சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதற்க்கான உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள கவனயீனமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நோயின் வீரியம் அதிகரித்தமையினால் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.