2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க விருதுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு சினமன் லைஃப்பில் ஜூன் 11-ம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, நிதி முகாமைத்துவம், நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திறன் ஆகிய துறைகளில் நிறுவன மற்றும் தலைமைச் சிறப்புக்களைப் பாராட்டியது. இந்த நிகழ்வு, இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எழுச்சிமிக்க தொழில்துறை தலைவர்கள் மற்றும் புத்தாக்கமான நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியது. MAS…

CIDக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிள்ளையான்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.