நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செலான் வங்கி தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாக உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக Colombo Motor Show 2025 உடன் இணைகிறது
செலான் வங்கி பிஎல்சி தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக Colombo Motor Showவின் உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக மீண்டும் கைகோர்த்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய சர்வதேச மோட்டார் மற்றும் மோட்டார் பாகங்கள் கண்காட்சியுடனான தனது நீண்டகால தொடர்பை நீடிப்பதில் வங்கி பெருமையடைகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான Colombo Motor Show 2025, நவம்பர் மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும். இலங்கையின் மிக முக்கிய…

