தோல்விக்கு நானே பொறுப்பு – தோனி

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ”நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது அழுத்தத்தைக் குறைக்க இன்னும் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால்…

Read More

ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 14 வயது துடுப்பாட்ட வீரர் வைபவ் சூரியவன்ஷி மிக இளம் வயதில் 20 இற்கு 20 போட்டியொன்றில் சதத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிக வேகமான சதத்தைப் பூர்த்தி செய்தவர் என்ற சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத்…

Read More

புதிய உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது.  கடந்த ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 287 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.  அத்துடன் நேற்றைய தினத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ஓட்டங்களை விளாசியது.  இது ஐபிஎல் வரலாற்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.  மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை…

Read More

டெல்லி தெருவோரத்தில் கிரிக்கெட் விளையாடிய முக்கிய புள்ளிகள்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ரோஸ் டெய்லர், கபில் தேவ் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் டெல்லியில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறார்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

Read More

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. டுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்தநிலையில், 265 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியின்…

Read More

90ஸ் கிட்ஸ்சின் கிரிக்கட் ஆதர்ச நாயகர்கள் கலந்து கலக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) வெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

விளையாட்டுகளில் கணவான்கள் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் என்றும் குறைவதில்லை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ஆதர்ச நாயகர்கள் என்று அழைக்கப்படும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வேபெற்ற வீரர்கள் மீண்டும் களத்தில் கலக்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இதனை அறிந்தே சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. டி20 பாணியில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெப்ரவரி 22ம்…

Read More

தொடரை கைப்பற்றிய இலங்கை.

ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (வெப்ரவரி 14) நடைபெற்ற அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அபாரமாக விளையாடி இலங்கை 174 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் இலங்கை கைப்பற்றிக்கொண்டது. 2016 ஆண்டில் 82 ஓட்டங்களால் அவுஸ்ரேலியவை வெற்றிகொண்ட இலங்கை 8வருடங்களுக்கு பின் மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் மா பெரும் வெற்றியை ஒருநாள் போட்டிகளில் பெற்றுள்ளது. அதேநேரம் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியனாக பங்குபெற்றவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு…

Read More