பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமையல் கலையின் புத்தாக்கப்படுத்தலை ஊக்குவிக்கும் வகையில் CAFE 2025க்கு Diamond அனுசரணை வழங்கும் Asriel
இலங்கையின் சமையல் கலைத் துறையின் முன்னணி நிறுவனமான Asriel Marketing Pvt Ltd, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக Culinary Art Food Expo (CAFE 2025) இன் Diamond அனுசரணையாளராக இணைவதாக அண்மையில் அறிவித்துள்ளது. தெற்காசியாவின் முன்னணி உணவு கண்காட்சியும், இலங்கையின் மிகப்பெரிய உணவு கண்காட்சியுமான CAFE 2025 இன் 22வது பதிப்பு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சி 2025 ஜூன் 13 முதல் 15 வரை சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சி மையத்தில்…