2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 15,541 ஆகும். அத்துடன், ரஷ்யாவிலிருற்து 8,220 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 4,740 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,450 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 2,614 சுற்றுலாப் பயணிகளும்,…
பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்.
பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நேற்று(ஏப்ரல் 04) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்து உலகலவியரீதியில் பல இடங்களில் 7 ரிக்டருக்கும் அதிகளவான நிலநடுக்கம் பதிவாவதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. பின் அவை தளர்த்தப்படுகின்றன.

