குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே புற்றுநோய் வேகமாகப் பரவும் அபாயம் – வாழ்க்கை முறை மாற்றம்.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் துணை இயக்குநர் டாக்டர் ஸ்ரீனி அழகப்பெரும, தற்போது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாகக் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கெட்ட பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாததும் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்றும் ,பெருங்குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More