நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!
இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் கடிதம் ஊடாக எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ள திலக் சியம்பலாப்பிட்டிய, தான் குறுகிய காலத்திற்கு இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வெள்ளிக்கிழமை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் சமர்ப்பித்ததாகவும், அவரது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

