சட்டவிரோதமாக வனப்பகுதியை சுத்தம் செய்த சந்தேக நபர் கைது.

ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதவிய வனப்பகுதியின் ஒரு பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபதிகொல்லேவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கப்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More