65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர தோற்றுவிடக் கூடாது – ஹரின் பெர்னாண்டோ
அரசாங்கத்தின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியடைந்தாலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோல்வியடைந்து விடக் கூடாது. அவர் தோல்வியடையும் பட்சத்தில் அரசியல் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பூச்சிய நிலையை அடைந்துவிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவதற்காக, கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவை சுத்தம் செய்வதற்கான…

