நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 இல் Hayleys Agriculture நிறுவனம் சாதனை
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள Hayleys Agriculture Holdings Limited (ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட்) நிறுவனம், 2025 டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு BMICH இல் இடம்பெற்ற மதிப்புமிக்க ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 விழாவில் பல்வேறு கௌரவங்களை தனதாக்கியுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய தேசிய கௌரவமான இந்த விருது விழாவில், Hayleys குழுமத்தின் HJS Condiments Limited, Quality Seed Company Limited, Hayleys Agro Biotech ஆகிய…

