நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிறந்த விற்பனை குழுவை வலுப்படுத்துவதற்காக எதிர்காலத்திற்கு ஏற்றகற்றல் முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சாஃப்ட்லாஜிக் லைஃப்
Softlogic Life, தனது நிறுவனத்தின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கற்றல் முகாமைத்துவ அமைப்பை (LMS) அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு பிரதிநிதி நிறுவனங்கள், மாற்று நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து உள்ளக விற்பனை குழுக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள திறன்கள் மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விற்பனை படையை உருவாக்குவதோடு, வருங்காலத்தை எதிர்கொள்வதற்கான தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சியை வழங்குவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும். இதன் மூலம், டிஜிட்டல்…

