நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Hikvision திறன் தேடல்: இலங்கையின் தொழில்நுட்பத் தொழிலாளர் படையணியை மேம்படுத்தும் திட்டம்
Hikvision Sri Lanka (ஹைக்விஷன் ஸ்ரீ லங்கா) நிறுவனமானது, அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடென்சீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற Hikvision Skill Quest (திறன் தேடல்) நிகழ்வின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஒன்பது மாகாணங்களில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில், பாதுகாப்பு தொழில்நுட்ப சேவை தொழில்துறையில் உள்ள இலங்கையின் திறமையான நிறுவுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் (installers, technicians, integrators) பங்குபற்றியிருந்தனர். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேசிய பட்டத்தை…

