நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2025 “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை விருதுவழங்கும் நிகழ்வில்” இரட்டை விருதுகளை வென்ற HNB Finance
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, 2025 ஆம் ஆண்டு “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில்” இரட்டை விருதுகளைப் பெற்று, அதன் வெளிப்படைத்தன்மை, நிறுவன மரபுகளைப் பேணல் மற்றும் விரிவான வணிக செயல்திறனுக்கான அதன் நிறுவன அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இம்முறை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், HNB FINANCE PLC நிறுவனம் நிதி மற்றும் குத்தகைத் துறையில் சிறந்த விரிவான நிறுவன அறிக்கையளிப்பிற்கான மூன்றாம் இடத்தைப் பெற்றது; மேலும்,…

