கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
சட்டவிரோதமாக வனப்பகுதியை சுத்தம் செய்த சந்தேக நபர் கைது.
ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதவிய வனப்பகுதியின் ஒரு பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபதிகொல்லேவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கப்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.