நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விநியோகச் சங்கிலி முகாமைத்துவ எதிர்காலத்தை வடிவமைக்க ஒன்றிணைந்த Alumex PLC மற்றும் ISMM
இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளரான Alumex PLC, வாடிக்கையாளர் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தில் (Supply Chain Management) விசேடத்துவத்துடனும் நிலைபேறான தன்மையுடனும் முன்னேறுவது தொடர்பான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் Alumex நிறுவனம், Institute of Supply and Materials Management (ISMM) நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதன் மூலம் இது வெளிப்படுகின்றது. இந்த மூலோபாய கூட்டாண்மையின் உத்தியோகபூர்வ ஆரம்பம் சமீபத்தில் இடம்பெற்ற ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ…

