யாழில் விபத்து – ஆறு பேர் காயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

வடக்கிலும் கால்பதிக்கும் நோலிமிட் (NOLIMIT), தனது 28வது காட்சியறையை யாழ்ப்பாணத்தில் வெகுவிமரிசையாகத் திறந்து வைக்கின்றது

கொழும்பு, இலங்கை – இலங்கையில் நவநாகரிக ஆடையணி விற்பனையில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நாமமான நோலிமிட், தனது 28வது காட்சியறையை யாழ் நகரின் மையத்தில் வெகுவிமரிசையாக திறந்து வைக்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. தனித்துவமான பண்புகளைக் கொண்ட கலாச்சாரத்துடன், வடக்கின் தனித்துவமான அடையாளமாகவும், ஆழமாக வேரூன்றியுள்ள மரபுகளையும் கொண்டுள்ள சிறப்பு மிக்க ஒரு நகரமாகத் திகழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தில் இந்நிறுவனம் தற்போது காலடியெடுத்து வைத்துள்ளது. தனித்துவமான சந்தை வாய்ப்புக்கள், பாரம்பரியச் சிறப்பு மிக்க உணவு வகை,…

Read More

யாழில் கடற்தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு  – நாகர்கோவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாளையடி, நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்களுக்கும் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.  இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், தங்களுக்கு…

Read More

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறைப்பாடு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் தமக்கு எதிராக…

Read More

பலாலியில் பயணிகள் விமான முனையத்துக்கான பயணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(2025.12.15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். புதிய முனையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது. முனையத் திட்டத்தின் இரண்டு…

Read More

வட்டுவாகல் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு நிறைவு.

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது. அண்மைய நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும்…

Read More

Kumarika Embraces Iyarkai Azhagu in Celebration of Women’s Natural Beauty at the Kantha Sashti Utsavam, Nallur Kandaswamy Temple

In the heart of Jaffna, the sound of temple bells and chants fill the air as thousands of devotees made their way to the sacred Nallur Kandaswamy Temple for the Kantha Sashti Utsavam. More than a religious celebration, it is a living expression of culture and community, a time when faith, beauty, and tradition come…

Read More

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை (17) காலை முன்னெடுத்துள்ளனர். கொட்டடி மீனவர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Read More

அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 3 குடும்பகள் பாதிப்பு!

நாடு முழுவதும் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/28 கிராம சேவகர் பிரிவில் உள்ள புங்குடுதீவில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. கடுமையான காற்றுடன் கூடிய கனமழை காரணமாக அங்கு மூன்று வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) நடத்தப்பட்டது.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது. குறித்த நடைபயணத்தில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More